ஏப்ரல் மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வீரத்திற்கு சவாலான மாதம். 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் கைகளில் ஆனையிறவு வீழ்ந்தது.
2001 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக “அக்னிகீல” என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி முகமாலையில் மூக்குடைபட்டது சிறீலங்கா அரசு. இதன் மூலம் மரபு வழிச்சமரில் விடுதலைப் புலிகள் பலம் வாய்ந்த ஒரு அமைப்பினர் என உலகம் தனது கவனத்தை ஈழத்தின் மீது திருப்பினர்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தில் ஒரு தந்திரோபாயத்தோடு நின்ற விடுதலைப் புலிகளை பல நாடுகளின் உதவியோடு சிறிலங்கா இராணுவம் தாக்கியது. நச்சு மற்றும் எரி வாயுவை பிரயோகித்தது. இந்தத் தாக்குதலில் தமிழ்மக்களின் வீரமறவர்கள் எனப் போற்றப்பட்ட பல தளபதிகள் வீரமரணம் அடைந்தார்கள்.
No comments:
Post a Comment